No results found

    வாயுத்தொல்லைக்கு காரணமும்... நிரந்தர தீர்வு தரும் ஆயுர்வேதம்...


    வயிற்றை அரைப் பங்கு உணவு, கால் பங்கு நீர், கால் பங்கு வெற்றிடமாக வைத்துக்கொள்வதே சிறந்தது.

    வாயுத்தொல்லை இருப்பதாக பலர் கூற கேட்டு இருப்போம். அதற்கு பல காரணங்கள் உள்ளன.

    சர்க்கரை, கொழுப்பு, ரத்த அளவு, உப்புச்சத்து, எலக்ட்ரோலைட்ஸ் ஆகியவற்றை டாக்டர் ஆலோசனை பெற்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள். ரத்தத்தில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், உணவுப்பாதை சரிவரச் சுத்தம் இல்லாமல் இருந்தாலும், நாள்பட்ட வயிற்றுப் புண், மலக்கட்டு பிரச்சினை இருந்தாலும், நேரம் தவறிச் சாப்பிடுவது, நேரம் தவறி உறங்குவது, முறையற்ற உணவுப் பழக்கவழக்கம், மன உளைச்சல் இருந்தாலும், பொரித்த உணவு, எண்ணெய், நெய், இனிப்பு, கார வகை பலகாரங்களை அடிக்கடி உண்பது, மது, புகைப்பழக்கம் இருந்தாலும் வாயுத் தொல்லை வரக்கூடும். இது, உடலின் பல பகுதிகளில் தசைப்பிடிப்பாக வெளிப்பட வாய்ப்புள்ளது.

    மலக்கட்டு இருந்தால் திரிபலா சூரண மாத்திரை காலை, மாலை இரண்டும், அல்லது நிலாவரை சூரண மாத்திரை இரவில் இரண்டும் எடுத்துக்கொள்ளலாம். வாயுத்தொல்லை, செரிமானமின்மை, வயிற்றுப் பொருமல், பசியின்மை போன்ற பிரச்சினை இருந்தாலும், அஜீரணம் இருந்தாலும் பஞ்ச தீபாக்கினி சூரண மாத்திரை (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் கலந்தது) வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு மாத்திரை ஆகாரத்துக்கு முன்போ பின்போ எடுத்துக்கொள்ளலாம். இஞ்சி லேகியம், அஸ்வகந்தி லேகியம் காலை 5 கிராம், இரவு 5 கிராம் ஆகாரத்துக்குப் பிறகு சாப்பிடலாம். ஓமநீர் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் 10 மி.லி. சாப்பிடலாம்.

    உடலின் தசைத்துடிப்பு தீர, தலை நடுக்கம் தீர, மேற்கண்ட மருந்துகளுடன் அமுக்கரா சூரண மாத்திரை இரண்டைக் காலை, இரவு சாப்பிடலாம் எனவும் கூறுகிறார்கள்.

    Previous Next

    نموذج الاتصال