No results found

    குழந்தையின்மை பிரச்சினைக்கு நவீன சிகிச்சை


    குழந்தை இல்லா தம்பதிகளுக்கு நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ள கோபாலபிள்ளை மருத்துவ மனையில் செயல்பட்டுவரும் டாக்டர் சுரேந்திரன் செயற்கை கருத்தரிப்பு பிரிவில் செயற்கை முறை கரு ஊட்டல் (டெஸ்ட் டியூப் பேபி) மூலம் நவீன சிகிச்சை அளித்து வருகிறார்கள். 31 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இம்மருத்துவ மனையில் மகப்பேறு நிபுணர் டாக்டர் மினிகோபால் கூறியதாவது:-

    * குழந்தையின்மைக்கு 45 சதவீத காரணம் உயிரணு, கருமுட்டை உற்பத்தி தொடர்பான பிரச்சினை கள்தான் இவை எளிதில் சரி செய்யக் கூடியவை ஆகும்.

    ஆண் சம்பந்தப்பட்ட கருவூட்டும் திறனின்மையை (மலட்டுத் தன்மை) சரி செய்ய உதவும் இனவிருத்தி செய்யும் தொழில் நுட்பம் “இன்ட்ரோ சைட்டோ ப்ளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜக்சன்” (Intro cytoplasmic Sperm Injection) ஆகும். பிரத்தியேகமாக உருவாக்கப் பட்ட நுண்ணோ க்கியின் உதவியுடன் உயிரணுவை முதிர்ச்சியடைந்த முட்டை யினுள் செலுத்தி உடலுக்கு வெளியே கருவுறும் வாய்ப்பை அதிகப்படுத்த ICSI சிகிச்சை முறை பயன் படுகிறது. சோதனைக்குழாயில் சினை யுற்ற முட்டை பின்னர் பெண்ணின் கர்ப்பப்பையினுள் வைக்கப்படுகிறது.

    உயர்திறன் கொண்ட உருப்பெருக்கி (ICSI Microscope) உதவி யுடன் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட பிப்பெட்டில் இருந்து IVF சோதனைக்கூடத் தில் ஒரு உயிரணு ஒரு அண்டத்தினுள் செலுத்தப்படுகிறது. சிறந்த மருந்துகளால் முன்பாக சோதனைக் கூடத்தில் மேம் படுத்தப்பட்ட கருமுட்டை களில் கருத்தரித்த லுக்கான அறிகுறிகள் உள்ளதா என சோதிக்கப்படுகிறது. வெற்றிகரமாக கருவுற்ற இரண்டு அல்லது மூன்று முட்டைகள் (Zygotes) தேர்வு செய்யப்பட்டு, நோயாளியின் கர்ப்பப்பை க்குள் Ultra Sound வழிகாட்டு தலுடன் வைக்கப்படுகிறது. எஞ்சியுள்ள கருமுட்டைகள் (embryos) பிற்கால பயன் பாட்டிற்காக பாதுகாக்கப்படுகிறது (cryo Preserved).

    கரு இடமாற்ற சிகிச்சைக்குப் பிறகு 24 மணி நேரம் மட்டுமே நோயாளி மருத்துவமனையில் இருக்க வேண்டி வரும். இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும் 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அதிகமான கருமுட்டைகளை இடமாற்றம் செய்து வைப்பதால் கருவுறும் வாய்ப்பு, இயற்கையாக கருவுறும் வாய்ப்பைவிட, பல மடங்காகிறது.

    இவ்வாறு டாக்டர் மினி கோபால் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال