அரஹரா என்று இடைவிடாமல் உச்சரித்தால், நம் பாவங்கள் யாவும் தீயில் இட்ட பஞ்சு போல் எரிந்து ஒழியும்.
ஹர என்ற சொல்லுக்குப் பாவங்களைப் போக்குவது என்று பொருள். ஹ என்ற எழுத்து தமிழில் அ என்று வரும். ஹரஹர என்ற சொல் தமிழில் அரோகரா என்று வந்தது.
சிவபெருமானுடைய திருநாமங்களில் அர என்ற சொல் உயர்ந்தது. அரஹரா என்று இடைவிடாமல் உச்சரித்தால், நம் பாவங்கள் யாவும் தீயில் இட்ட பஞ்சு போல் எரிந்து ஒழியும்.
- வாரியார் உரையிலிருந்து ..